Featured Posts

ஞாயிறு, 19 ஜூன், 2011

எறும்பு யானை கதை 2


மற்று மொரு எறும்பு யானை கதை.
எறும்புக்கும் யானைக்கும் சண்டை வந்துவிடுமாம்.
இரண்டு எறும்புகள் மரத்தின் மீது ஏறி இருந்து கொண்டு யானையைப் பேசிக்கொண்டிருக்குமாம்(திட்டிக்கொண்டிருக்குமாம்).
அதால யானைக்குக் கடுமையான கோபம் வந்துவிடுமாம்.
மரத்திலிருக்கிற எறும்புகளை நோக்கி தனது தும்பிக்கையால் ஊதி விடுமாம். எறும்புகள் மிகவும் கெட்டியாகப் மரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இதனால் தனது முழு பலத்தையும் சேர்த்து யானை ஊதிவிட்டதாம்.
ஒரு எறும்பு நிலைதவறி யானையின் மீது விழுந்து விட்டதாம்.
இதனை எதிர்பாராத மற்ற எறும்பு சொன்னதாம்.
“மச்சான் கெட்டியாய்ப்பிடிச்சிரு நான் எங்கட ஆக்களக் கூட்டிட்டு வாறன்”
யானை “.....????!!!!!!!!!”

வியாழன், 16 ஜூன், 2011

ஆங்கிலம் பேசுவோம்....


சட்டுப் புட்டெண்டு இங்கிலிஸ் கதைக்க யாருக்குத்தான் ஆசையில்ல....
பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் பாடமெண்டா கக்குஸ் எண்டாலும் பறவாயில்ல எண்டு கக்குஸ்க்குள்ள இருக்கிற பலர எனக்குத் தெரியும்......(சத்தியமா நானில்லயுங்க)
ஆனாக் கொஞ்ச இங்கிலிஸ தெரிஞ்சு வைச்சுக்கொண்டு நிறைய பில்டப் போடுறவங்களும் இல்லாமலில்ல....
இந்தப் பதிவில நான் கொஞ்சம் இங்கிலிச வைச்சுக்கொண்டு உங்கள சிரிக்க வைக்க ஆசப் படுறேன். இல்ல எனக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு பலர் நச்சுக்கொண்டு இருக்கினமெல்லோ அதுதான்.....


பள்ளிக்கூடத்தில ரீச்சர் வகுப்ப விட்டுப் போன கொஞ்ச நேரத்தில சேர் ஒராள் வந்து கேட்டாராம்
"Where is Your Teacher?"
அப்ப மாணவங்க சொன்னாங்களாம்
"Just now, she Passed away."
இதால மாஷ்டருக்குகோவம் வந்துடுமாம்.உடன
"Go and rotate the Ground"
எண்டாராம்........


வியாழன், 26 மே, 2011

சைனாக்காரரின்ர பெயர்.....

சைனாக்காரரின்ர பெயருகளெல்லாம் மிகவும் வித்தியாசமானது.
“பிங் சிங் சுவிங்” என்றேல்லாம் பெயர் வைப்பார்கள்.
அத வச்சு ஒரு கதை எழுத யோசிச்சனான்.. அத வாசிச்சுப் பாத்திட்டு என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோ.
அது என்னண்டா
சைனாவில ஒரு வெள்ளை மனுசனுக்கும் மனுசிக்கும் கலியானம் ஜாம் ஜாம் எண்டு நடந்தது.
கலியானம் முடிந்து முதல்ப் பிள்ளை பிறந்தது. அது சிகப்பாகவும் அழகாகவும் இருந்தது.
தகப்பன் ஆசையோட எடுத்துப் பாத்துட்டு “சிங் பைங் றய்ங்” என்று பெயர் வைப்பாராம்.
அடுத்த பிள்ளை பிறக்குமாம்.
அதுகும் வெள்ளையாய் இருக்குமாம். அதுக்கு தகப்பன் “நிம் சிங் றிங்” என்று பெயர் வைத்தானாம்.
மூன்றாம் பிள்ளை பிறந்தது.
அதைத் தகப்பன் எடுத்துப்பாத்தானாம் நல்ல கறுப்பு நிறத்தில ஒரு பிள்ளையாய் இருந்ததாம்.
உடனே தகப்பன் “சம் திங் றோங்” என்று பெயர் வைத்து விடுவானாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...