வியாழன், 26 மே, 2011

சைனாக்காரரின்ர பெயர்.....

சைனாக்காரரின்ர பெயருகளெல்லாம் மிகவும் வித்தியாசமானது.
“பிங் சிங் சுவிங்” என்றேல்லாம் பெயர் வைப்பார்கள்.
அத வச்சு ஒரு கதை எழுத யோசிச்சனான்.. அத வாசிச்சுப் பாத்திட்டு என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோ.
அது என்னண்டா
சைனாவில ஒரு வெள்ளை மனுசனுக்கும் மனுசிக்கும் கலியானம் ஜாம் ஜாம் எண்டு நடந்தது.
கலியானம் முடிந்து முதல்ப் பிள்ளை பிறந்தது. அது சிகப்பாகவும் அழகாகவும் இருந்தது.
தகப்பன் ஆசையோட எடுத்துப் பாத்துட்டு “சிங் பைங் றய்ங்” என்று பெயர் வைப்பாராம்.
அடுத்த பிள்ளை பிறக்குமாம்.
அதுகும் வெள்ளையாய் இருக்குமாம். அதுக்கு தகப்பன் “நிம் சிங் றிங்” என்று பெயர் வைத்தானாம்.
மூன்றாம் பிள்ளை பிறந்தது.
அதைத் தகப்பன் எடுத்துப்பாத்தானாம் நல்ல கறுப்பு நிறத்தில ஒரு பிள்ளையாய் இருந்ததாம்.
உடனே தகப்பன் “சம் திங் றோங்” என்று பெயர் வைத்து விடுவானாம்.

திங்கள், 23 மே, 2011

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு PenDrive

நான் கருணானிதியல்ல, எனது பதிவிற்கு வோட்டுப்போட்டால் ஒரு பிளாஷ்(Flash) இலவசம் எண்டு சொல்ல.
சரி நான் உங்களுக்கு, அதாவது இத வாசிக்கிற எல்லாருக்கும் பிளாஷ் ஒண்டு பிறீயாத்(Free) தரப்போறன். கோபப்படாதயுங்க... தொடர்ந்து வாசியுங்க..
நான் பில்கேட்ஸ் அல்ல பாக்கிற எல்லாருக்கும் பிளாஷ் குடுக்க..
ஆனாலும் நான் உங்களுக்கு அதிரடியாக தரப்போகிறேன் ஒரு பிளாஷ்...
இதப்பாத்தா வடிவேலுவின்ர பம்பல் மாதிரி தருவேன் ஆனாத் தரமாட்டேன்........
இந்த உலகத்தில பில்லியன் கணக்கான வெப்சைட் என சொல்லப்படும் இணையப்பக்கங்கள் உள்ளன.இதில ஒண்டாவது எனக்கு பிறீயா பிளாஷ் ஒண்டு தராதோ எண்டு தேடினதில கிடைச்சது தான் இந்தப் பிறீப் பிளாஷ்.

பிளாஷ் எண்டா என்ன?
ஒரு கணினியில இருக்கிற ஓரு தரவை சேகரித்து வைக்க அல்லது அதனை வேறு ஒரு கணினிக்கு எடுத்துச்செல்ல உதவும் ஒரு சாதனம்.

இவை அனைத்தயும் தருகிறதுதான் www.mydrive.ch .
இதில ஒரு கணக்கொண்ட ஆரம்பிக்கிறது மட்டும்தான் எமக்கு வேலை. அதுக்குப்பிறகு அது எமது கணினியில் வேலைசெய்வது போலவே அந்த பிளாஷையும் பயன்படுத்த முடியும்.
இதில இருக்கிற பல அனுகூலங்களால் இது உண்மையான பிளாஷ் போலவே இருக்கிறது....
இப்ப நான் உங்களுக்கு ஒரு இலவச பிளாஷ் ஒண்டு தந்திருக்கிறேன். இதப் பயன்படுத்துவதும் விடுவதும் உங்கள் கையில்......

திங்கள், 16 மே, 2011

ஓசியாய்க் கிடைத்த ரீவீ

இன்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர். இலங்கையின் UN பிரதிநிதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன பதவி வகித்த காலம். அப்போது உலகமெங்கிலும் நடந்து கொண்டிருந்தது உலமகா யுத்தம் இரண்டு.
விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது இரண்டாம் மகாயுத்தம். எங்கும் குண்டுவெடிப்பும், மரணமும், குண்டு வீச்சும், கொலையும் என பயப்படுத்திக்கொண்டிருந்த போது.............
ஜப்பானை உலகமே திரும்பிப் பார்த்தது. எவ்வாறு யுத்தத்தில் வெற்றி பெற்றதா? இல்லை யுத்தத்தை முடிவுக்குக் கொணர்ந்ததா? எதுவுமில்லை ஜப்பான் அணுகுண்டுக்கு இரையானது. மிகவும் பெரிய இழப்பு ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.
பலலட்சக்கணக்கான மக்கள் எங்கும் பிணங்களாய் அவதாரம் எடுத்து வீதியில்ப் படுத்திருந்தனர். எங்குமே மக்களின் பிணங்களாக காட்சியளித்தன. இந்த நேரத்தில்த்தான் எமது நாட்டின் UN பிரதிநிதி தனது வேலையைக் காட்டினார்.
உலகில் எந்த நாடும் ஜப்பான் மக்களுக்காய் பரிந்து பேசவில்லை. ஆனால் ஆசிய கண்டத்திலே இருக்கும் சிறிய நாடான இலங்கை ஜப்பானுக்கான குண்டு வீச்சினை கண்டித்து UN இல் தனது வாதத்தை முன்வைத்தது. அதனை வன்மையாகக் கண்டித்தது.
இது ஏன் நடந்ததோ எமக்குத் தெரியாது. அநுதாபத்தில்க் கதைத்தாரோ இல்லை என்னவோ எமக்குத் தெரியாது. ஆனால் ஜப்பான் இந்தக் காரியத்திற்குத் தனது நன்றிக்கடனைத் தெரிவித்தது. எவ்வாறு தெரிவித்தது?
ஆசியாக் கண்டத்திலேயே எல்லா நாடுகளும் ஏன் இந்தியா கூட தனது முதலாவது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை கறுப்பு வெள்ளை நிறத்திலேயே தொடங்கியது. ஆனால் எமது நாடான இலங்கையோ வர்ணத்தொலைக்காட்சியாகவே தொடங்கியது.
இது சொந்தச் சொத்தல்ல. ஜப்பான் நாட்டு மக்கள் UN பிரதிநிதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் இலங்கை நாட்டுக்கு முற்றிலும் இலவசமாக வர்ண ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தை கட்டித்தந்தது.
அப்ப இதுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்குத்தானே ஹி..ஹி :-)

ஞாயிறு, 15 மே, 2011

எறும்பு யானை 1


இப்ப கொஞ்சக்காலமா எறும்பு யானைக் கதைகள் பேமஸா இருக்குது. அதால உங்களுக்கு ஒரு கதை.
எறும்புகளுக்கெல்லாம் கார் றேஸ் வைச்சாங்களாம் எறும்பு சனசமூக நிலையம். எறும்புகளும் உற்சாகத்தோட பெயரெல்லாம் கொடுத்து பங்கு பற்றினமாம்.
“ஆம் இன்று எமது சனசமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எறும்புகளுக்கான சைக்கிளோட்டப் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.”
என்று அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமானது.
“ஒன் யுவர் மார்க்.”
“செற்”
“றெடி”
“கோ”
எல்லா எறும்புகளும் அந்த நூறு மீற்றர் சைக்கிளோட்டப் போட்டியை வெல்லும் நோக்குடன் மிக வேகமாக சென்று கொண்டிருந்தன.
திடீரென......
இடையில் ஒரு யானை ஒன்று பாதையைக் கடந்தது
உடனே ஒரு எறும்பு கத்தியது
“டேய் சைக்கிளில அடிபட்டுச் செத்திடாதயடா.........”
Related Posts Plugin for WordPress, Blogger...