வியாழன், 27 ஜனவரி, 2011

Mr. இன்ஸ்பெக்டர்

ஒரு அதிரடிக்கதை ஒன்றை இந்தப்பதிவில் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இது சிறிய பதிவானாலும் கொஞ்சம் அதிரடி கொஞ்சம் வித்தியாசமான பதிவு. வாருங்கள் பதிவைச் சுவைப்போம்.

”நீ இப்ப சரண்டர் ஆகாட்டி நான்னுன்னை நோக்கிச்சுட வேண்டிவரும். மரியாதையாச்சரண்டர் ஆகிடு என்கவுண்டருக்குப் போக வைக்காத”
”டேய் நீ சுடும்வரைக்கும் நான் சும்மாவா இருப்பேன். நானுஞ்சுடுவேன். என்னட்டையும் துவக்கிருக்கு தெரியுமெல்லோ.” என்று தனது துவக்கைக்காட்டினான்.
ஏய் நீ துவக்கு வைச்சிருக்கிறது எனக்குத் தெரியும். நீ என்னைச்சுட்டாலும் எங்கடயரசு என்ர குடும்பத்தைக்கவனிக்கும். எனக்கு நல்லபெயரைத் தந்து ராஜமரியாதையோட கடைசிவரைக்குமென்ர பெயர் நிலைக்கிற மாதிரிச் செய்வாங்க. ஆனா நீ செத்தா உன்ரவுடம்ப எடுக்கக்கூட ஒருத்தனும் வரமாட்டாங்க. மரியாதையா வந்து சரணடை”
”டே போடா, நான் செத்தா என்ர அசிஸ்டென்ட் ஆனந்தென்ர ஏறியாவைப் பாத்துக்கொள்ளுவான். நீ என்னைக் கனவிலையும் நெருங்க முடியாது.”
மெல்ல மெல்ல அவனிருந்த இடத்திற்கருகிற்ச் சென்றான். இன்ஸ்பெக்டர் தனது துவக்கைச் சுடுவதற்கெடுத்து ரௌடியை நோக்கிச் சுட ஆயத்தமானான். ரௌடியும் தனது துவக்கயெடுத்து சுட ஆயத்தமானான். இருவரும் சுட்டனர்.
டுமீல்.. டுமீல்...................

”டேய் ராமு சோமு விளையாடினது காணும் வாங்க சாப்பிடலாம்.”
இருவருமெழுந்தனர் போட்டிக்கோடிச்சென்று மேசையிலயிருந்து சாப்பிட்டுக்கொண்டே
”நாளைக்கும் விளையாடுவோம்.”

சனி, 22 ஜனவரி, 2011

வௌ்ளை மாளிகை

வௌ்ளை மாளிகை என்பது அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாளிகையாகும். இங்கே தான் அமெரிக்காவின் மான்புமிகு ஜனாதிபதியவர்கள் வாழ்வார். தற்போது ஜனாதிபதியான ஒபாமா அவர்களும் வௌ்ளை மாளிகையிலேதான் வசிக்கிறார். இம் மாளிகையிலே வேறு நாட்டுத் தலைவர்களும் தங்கி வருகின்றனர். நீங்கள் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இம் மாளிகைக்குச் சென்று வரலாம்.

வௌ்ளை மாளிகையின் உட்புறத்தோற்றம்

130 இற்கும் அதிகமான அறைகளைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது இம் மாளிகை. ஜனாதிபதியின் இருப்பிடம் மற்றும் அவரின் குடும்பத்தின் இருப்பிடங்கள் இரண்டாம் மாடியிலே அமைந்திருக்கிறது. அதேவேளை விருந்தினர்களுக்கான அறைகள் மூன்றாம் மாடியிலே அமைந்திருக்கிறது.
முதலாம் மாடியிலே இருக்கும் பெரிய அறைகள் தேனீர் விருந்து, இரவு விருந்து போன்றவை பகிரப்படுகிறது. இங்கே சில அறைகள் அவற்றுக்குப் பூசப்பட்ட நிறத்தினடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஐந்து அறைகளைப் பார்வையிடலாம். அவற்றுள் நீலவறை, சிவப்பறை, பச்சையறைகளும் உள்ளடங்கும்.

நீள்வட்டக் காரியாலயம்.

ஜனாதிபதி தனது கடமைகளைச் செய்யும் காரியாலயமே நீள்வட்டக் காரியாலயம் எனப்படுகிறது. இது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு காரியாலயமாகும்.
ரோஜாத் தோட்டம் ஒன்று இக் காரியாலயத்திற்கு அருகாமையில் காணப்படுகிறது. ஜனாதிபதி மக்களுடன் தொலைக்காட்சி மூலமாகப் பேசுபவை இக் காரியாலயத்தில் அல்லது அருகிலுள்ள ரோஜாத் தோட்டத்திலேயே நடத்தப்படும்.
வௌ்ளை மாளிகையின் கட்டுமானம்
வெள்ளை மாளிகையைக் கட்டுவதற்காக ஜேம்ஸ் கோபன் என்ற ஐயர்லாந்து கலைஞனின் ஆக்கம் வெற்றிபெற்றது. அதன் பின்னர் வௌ்ளை மாளிகை ஜேம்ஸ் கோபனால்க் கட்டப்பட்டது. 1800இல் வௌ்ளை மாளிகை முற்றிலுமாய் முடிக்கப்பட்டது.

எரிந்த வௌ்ளை மாளிகை

1812ம் ஆண்டு பிரித்தானியரின் படைகள் அமெரிக்காவின் வௌ;ளை மாளிகையை முற்றுகையிட்டு எரிக்கப்பட்டன. இதன் புகை மாளிகையின் இடமுழுவதையும் கருமையாக்கிற்று. அதன் பின் 1815 இல் மீண்டும் இம் மாளிகை கட்டப்பட்டது. மீண்டுமாய் வௌ்ளை நிறப்பபூச்சும் பூசப்பட்டது.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வணக்கம் தமிழர்களே

வணக்கம்.
எனது முதல்ப்பதிவினைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது சொந்தங்களாக எனது வலைப்பூவை ஆதரிக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்ப்பதைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதுவரை நீங்கள் எத்தனையோ வலைப்பூக்களைப் பார்த்திருப்பீரகள். அதுபோன்று இதையும் நீங்கள் வளர்க்க உங்களின் பின்னூட்டத்தைப் பதிவுசெய்வதால் முடியும் எனகூறிக்கொள்கிறேன். இது நிச்சயமாக பலவிதமான சுவையான அம்சங்களுடன் வலம் வரும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். அவை உங்களுக்குப் பிரயோசனமாகவும் இருக்கும்.
முதல்ப்பதிவைச் சிறு சம்பவத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருநாள் எனது நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் எனக்குக் கூறிய ஒரு சம்பவமே இது.
ஒரு இளைஞன் தனது வேலையில்லாப்பட்டதாரி நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு இருந்தபோது ஒருவன் தனது இலண்டன் பயணத்தைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டான். இதைக்கேட்ட அந்த இளைஞனுக்கு கையரிக்கத்தொடங்கியது. ”நானும் இலண்டனுக்குச் சென்று சம்பாதித்தால் என்ன?” என்று ஒரு யோசனை.
தனது மனதிலே வைத்து அதைப் புதைத்துக் கொண்டாலும் சாடையாய் ஒரு ஆசை. வேலையும் கிடைச்சபாடில்லை சரி என்னசெய்யலாம் எண்டு யோசிக்கும்போது இலண்டனே கண்முன் வந்தது.
சரி வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்கள்? என்று அறியத் தனது ஐடியாவை வீட்ட சொன்னான்.
”அப்பா இலண்டனுக்குப் போகப்போறேன்.”
அதுக்கு அப்பா சொன்னாராம்
”எங்கயெண்டாலும் போ ஆனா ஆறு மணிக்கு முதல் வீட்ட வந்திடு சரியோ”
”......”

இப்படிச் சுவையான பதிவுக்கு எம்மோடு பயணியுங்க............
Related Posts Plugin for WordPress, Blogger...