வெள்ளி, 21 ஜனவரி, 2011

வணக்கம் தமிழர்களே

வணக்கம்.
எனது முதல்ப்பதிவினைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது சொந்தங்களாக எனது வலைப்பூவை ஆதரிக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்ப்பதைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதுவரை நீங்கள் எத்தனையோ வலைப்பூக்களைப் பார்த்திருப்பீரகள். அதுபோன்று இதையும் நீங்கள் வளர்க்க உங்களின் பின்னூட்டத்தைப் பதிவுசெய்வதால் முடியும் எனகூறிக்கொள்கிறேன். இது நிச்சயமாக பலவிதமான சுவையான அம்சங்களுடன் வலம் வரும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். அவை உங்களுக்குப் பிரயோசனமாகவும் இருக்கும்.
முதல்ப்பதிவைச் சிறு சம்பவத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருநாள் எனது நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் எனக்குக் கூறிய ஒரு சம்பவமே இது.
ஒரு இளைஞன் தனது வேலையில்லாப்பட்டதாரி நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு இருந்தபோது ஒருவன் தனது இலண்டன் பயணத்தைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டான். இதைக்கேட்ட அந்த இளைஞனுக்கு கையரிக்கத்தொடங்கியது. ”நானும் இலண்டனுக்குச் சென்று சம்பாதித்தால் என்ன?” என்று ஒரு யோசனை.
தனது மனதிலே வைத்து அதைப் புதைத்துக் கொண்டாலும் சாடையாய் ஒரு ஆசை. வேலையும் கிடைச்சபாடில்லை சரி என்னசெய்யலாம் எண்டு யோசிக்கும்போது இலண்டனே கண்முன் வந்தது.
சரி வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்கள்? என்று அறியத் தனது ஐடியாவை வீட்ட சொன்னான்.
”அப்பா இலண்டனுக்குப் போகப்போறேன்.”
அதுக்கு அப்பா சொன்னாராம்
”எங்கயெண்டாலும் போ ஆனா ஆறு மணிக்கு முதல் வீட்ட வந்திடு சரியோ”
”......”

இப்படிச் சுவையான பதிவுக்கு எம்மோடு பயணியுங்க............

2 கருத்துகள்:

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...