வியாழன், 27 ஜனவரி, 2011

Mr. இன்ஸ்பெக்டர்

ஒரு அதிரடிக்கதை ஒன்றை இந்தப்பதிவில் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இது சிறிய பதிவானாலும் கொஞ்சம் அதிரடி கொஞ்சம் வித்தியாசமான பதிவு. வாருங்கள் பதிவைச் சுவைப்போம்.

”நீ இப்ப சரண்டர் ஆகாட்டி நான்னுன்னை நோக்கிச்சுட வேண்டிவரும். மரியாதையாச்சரண்டர் ஆகிடு என்கவுண்டருக்குப் போக வைக்காத”
”டேய் நீ சுடும்வரைக்கும் நான் சும்மாவா இருப்பேன். நானுஞ்சுடுவேன். என்னட்டையும் துவக்கிருக்கு தெரியுமெல்லோ.” என்று தனது துவக்கைக்காட்டினான்.
ஏய் நீ துவக்கு வைச்சிருக்கிறது எனக்குத் தெரியும். நீ என்னைச்சுட்டாலும் எங்கடயரசு என்ர குடும்பத்தைக்கவனிக்கும். எனக்கு நல்லபெயரைத் தந்து ராஜமரியாதையோட கடைசிவரைக்குமென்ர பெயர் நிலைக்கிற மாதிரிச் செய்வாங்க. ஆனா நீ செத்தா உன்ரவுடம்ப எடுக்கக்கூட ஒருத்தனும் வரமாட்டாங்க. மரியாதையா வந்து சரணடை”
”டே போடா, நான் செத்தா என்ர அசிஸ்டென்ட் ஆனந்தென்ர ஏறியாவைப் பாத்துக்கொள்ளுவான். நீ என்னைக் கனவிலையும் நெருங்க முடியாது.”
மெல்ல மெல்ல அவனிருந்த இடத்திற்கருகிற்ச் சென்றான். இன்ஸ்பெக்டர் தனது துவக்கைச் சுடுவதற்கெடுத்து ரௌடியை நோக்கிச் சுட ஆயத்தமானான். ரௌடியும் தனது துவக்கயெடுத்து சுட ஆயத்தமானான். இருவரும் சுட்டனர்.
டுமீல்.. டுமீல்...................

”டேய் ராமு சோமு விளையாடினது காணும் வாங்க சாப்பிடலாம்.”
இருவருமெழுந்தனர் போட்டிக்கோடிச்சென்று மேசையிலயிருந்து சாப்பிட்டுக்கொண்டே
”நாளைக்கும் விளையாடுவோம்.”

2 கருத்துகள்:

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...