திங்கள், 16 மே, 2011

ஓசியாய்க் கிடைத்த ரீவீ

இன்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர். இலங்கையின் UN பிரதிநிதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன பதவி வகித்த காலம். அப்போது உலகமெங்கிலும் நடந்து கொண்டிருந்தது உலமகா யுத்தம் இரண்டு.
விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது இரண்டாம் மகாயுத்தம். எங்கும் குண்டுவெடிப்பும், மரணமும், குண்டு வீச்சும், கொலையும் என பயப்படுத்திக்கொண்டிருந்த போது.............
ஜப்பானை உலகமே திரும்பிப் பார்த்தது. எவ்வாறு யுத்தத்தில் வெற்றி பெற்றதா? இல்லை யுத்தத்தை முடிவுக்குக் கொணர்ந்ததா? எதுவுமில்லை ஜப்பான் அணுகுண்டுக்கு இரையானது. மிகவும் பெரிய இழப்பு ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.
பலலட்சக்கணக்கான மக்கள் எங்கும் பிணங்களாய் அவதாரம் எடுத்து வீதியில்ப் படுத்திருந்தனர். எங்குமே மக்களின் பிணங்களாக காட்சியளித்தன. இந்த நேரத்தில்த்தான் எமது நாட்டின் UN பிரதிநிதி தனது வேலையைக் காட்டினார்.
உலகில் எந்த நாடும் ஜப்பான் மக்களுக்காய் பரிந்து பேசவில்லை. ஆனால் ஆசிய கண்டத்திலே இருக்கும் சிறிய நாடான இலங்கை ஜப்பானுக்கான குண்டு வீச்சினை கண்டித்து UN இல் தனது வாதத்தை முன்வைத்தது. அதனை வன்மையாகக் கண்டித்தது.
இது ஏன் நடந்ததோ எமக்குத் தெரியாது. அநுதாபத்தில்க் கதைத்தாரோ இல்லை என்னவோ எமக்குத் தெரியாது. ஆனால் ஜப்பான் இந்தக் காரியத்திற்குத் தனது நன்றிக்கடனைத் தெரிவித்தது. எவ்வாறு தெரிவித்தது?
ஆசியாக் கண்டத்திலேயே எல்லா நாடுகளும் ஏன் இந்தியா கூட தனது முதலாவது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை கறுப்பு வெள்ளை நிறத்திலேயே தொடங்கியது. ஆனால் எமது நாடான இலங்கையோ வர்ணத்தொலைக்காட்சியாகவே தொடங்கியது.
இது சொந்தச் சொத்தல்ல. ஜப்பான் நாட்டு மக்கள் UN பிரதிநிதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் இலங்கை நாட்டுக்கு முற்றிலும் இலவசமாக வர்ண ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தை கட்டித்தந்தது.
அப்ப இதுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்குத்தானே ஹி..ஹி :-)

1 கருத்து:

  1. ஜப்பான் இன்னும் நன்றிக் கடனாக இன்னும் கூட ஏதோ பண்ணிக் கொண்டுதான் இருக்கு.....
    jayawardananpura Hospital ம் ஜப்பானாலேயே கட்டிக் ஒடுக்கப் பட்டது. இன்னும் பல இதில் அடங்கும்

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...